Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

காஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

1 minutes read

காஷ்மீரை மறந்துவிடுங்கள் என்றும் காஷ்மீர் பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியானா மாநில சட்டபேரவை தேர்தலையொட்டி பா.ஜ.க சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசார பணிகளை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர், “வளைகுடா பகுதியில் தீவிர வாத பதற்றத்தை குறைக்க முயற்சிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈரான் சென்றுள்ளார். ஆனால், இந்தியா வுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகளை தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பினால், அதற்கு நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க விரும்பி அதற்கு இந்தியாவின் உதவி யைக் கோரினால் அதற்காக பாகிஸ் தானுக்கு இராணுவத்தை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். காஷ்மீரை நீங்கள் மறந்துவிடுங்கள். காஷ் மீரைப் பற்றி பாகிஸ்தான் சிந்திக்கவும் கூடாது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இது தொடர்பாக வேறு எந்த நாடும் எங்களுக்கு அழுத்தமும் தரமுடியாது.

1947-ல் இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தான் உருவானது. ஆனால், 1971-ல் பாகிஸ்தானே இரண்டானது. காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் போக்கு இதேபோன்று தொடர்ந்தால் அந்நாடு மேலும் உடைவதை யாராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More