Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எலி

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எலி

1 minutes read

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகும் முன்னர் மதிய உணவில் எலி கிடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹபூரைச் சேர்ந்த ஜன்கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற அரசுசாரா அமைப்பால் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது.

அந்த உணவானது, இன்று (புதன்கிழமை) மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மதிய உணவை வாங்கிய மாணவர்கள் ஸ்பூனை வைத்து சாதத்தை எடுத்தபோது சாதத்தின் அடியில் இருந்து இறந்த எலி வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த உணவை சாப்பிட்ட ஆசிரியர் மற்றும் 9 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மட்டுமல்லாது மேலும் 15 மாணவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து இதுவரை உத்தரபிரதேச அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் முசாபர் நகர் மாவட்ட ஆட்சியர், உணவு விநியோகித்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே உத்தரபிரதேச அரசின் மதிய உணவுத்திட்டம் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More