Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடக்கு, கிழக்கில் தொடர்கிறது கனமழை; வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

வடக்கு, கிழக்கில் தொடர்கிறது கனமழை; வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

1 minutes read

வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேவேளை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்தமை காரணமாக அப் பகுதியில் போக்கு வரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More