வள்ளிபுனத்தில் உடைந்தது பாலம்!
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள (ஏ-35) பாலமொன்று உடைந்துள்ளதால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வள்ளிபுனம், காளி கோவிலடி பகுதியிலுள்ள பாலமே இவ்வாறு உடைந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதிப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வீதியில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
முறிந்து வீழ்ந்த மரம்! பாதிக்கப்பட்ட போக்குவரத்து
போக்குவரத்து 3 மணித்தியாலயமாக பாதிப்படைந்திருந்த நிலையில் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்புடன் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த மரத்தினை வெட்டி, அவ்விடத்திலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.