ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக இரண்டு மூன்று முறை முயற்சித்த போது, கட்சியில் இருந்து வெளியேறியவர்களே அதனை தடுத்ததாகவும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை அவரால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் எனக் கூறி ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவத்தில் வைத்துக்கொண்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் நீண்டகாலம் செல்வதற்கு முன்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்ப நேரிடும் எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.