Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் மீண்டும் கொரோனா அச்சம்? வைத்தியர் சத்தியமூர்த்தி விளக்கம்!

யாழில் மீண்டும் கொரோனா அச்சம்? வைத்தியர் சத்தியமூர்த்தி விளக்கம்!

1 minutes read

#Covid-19 #Corona Virus #Jaffna

யாழிலிருந்து இந்தியா திரும்பிய வர்த்தகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அதிகளவில் பதற்றமடைய தேவையில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபரிடம் இருந்து ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக அரிதாகவே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை தங்களது நாட்டுக்கு மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கிருந்த நிலையில் கப்பல் மூலம் அண்மையில் இந்தியாவுக்கு திரும்பிய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்க அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட 13 பேருடைய மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த வர்த்தகருடன் தொடர்பை பேணியவர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

அந்த வர்த்தகர் யாழப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More