Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலக ரத்த தான தினம் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் தெரியுமா?

உலக ரத்த தான தினம் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் தெரியுமா?

1 minutes read

இரத்த தானம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய மிக முக்கிய தானம். ரத்த தானத்தால் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மிக சிறந்த உதவியாகிறது. ரத்த தான தினத்தில் அதை கடைப்பிடிப்பதன் அவசியத்தை இங்கு காண்போம்.

ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. கடந்த 2004ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ரத்த தான தினம், ரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான ரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் உலக சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 8 முக்கிய விஷயத்திற்காக பிரச்சாரம் செய்துவருகின்றது. அந்த வகையில் உலக காசநோய் தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை தினம், உலக ஹெபடைடிஸ் நாள், உலக இரத்த தான தினம், மற்றும் உலக எய்ட்ஸ் தினம். ரத்த தானம் ஒரு உயிரைக் காக்கக் கூடிய மிக முக்கிய விஷயம் என்பதால் ரத்த தான விழிப்புணர்வு மிக அவசியமாகிறது.

இளைஞர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அதே வேளையில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சரியாக பரிசோதனை செய்யப்படாத இரத்தத்தை ஏற்றியதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், சிகிச்சை பெற சென்றவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன.

இது போன்ற மோசமான மருத்துவ சிகிச்சை தடுக்கும் வகையில் தான் உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More