Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

1 minutes read

பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளிவில் அறவிடப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில் அக்குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மின் பாவனையாளர்கள், பெப்ரவரி மாத மின் பட்டியல் குறிப்பிடப்பட்ட கண்டன அளவையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு செலுத்த முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More