Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு தொற்று உறுதி: பலி எண்ணிக்கை 24,915 -ஆக உயர்வு 

இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு தொற்று உறுதி: பலி எண்ணிக்கை 24,915 -ஆக உயர்வு 

2 minutes read


புது தில்லி: நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,68,876-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 24,915 -ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 32,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 606 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24,915 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 3,31,146 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,12,815  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,75,640 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;  உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,51,820 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,127 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் தில்லியில் 1,16,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,487 பேர் பலியாகியுள்ளனர்.

பாதிப்பு:  9,68,876
பலி: 24,915
குணமடைந்தோர்:  6,12,815
சிகிச்சை பெற்று வருவோா்: 3,31,146

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More