விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு அரசியல் பிரமுகர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்படாத இத் தகவல் வணக்கம் லண்டனுக்கு கிடைத்தது.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அம்பாறையில் போட்டியிட்ட கருணா அம்மான் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் அவரது ஆதரவுத் தரப்பான மகிந்த ராஜபக்சவினர் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் கிழக்கின் புதிய ஆளுநர் கருணா என்று கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
எனினும் அதிகாரபூர்வமாக எந்த வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.