Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கிற்கு ஒருபோதும் இந்த அதிகாரத்தை வழங்க முடியாது! | சரத் வீரசேகர

வடக்கிற்கு ஒருபோதும் இந்த அதிகாரத்தை வழங்க முடியாது! | சரத் வீரசேகர

1 minutes read
பிரபாகரனால் முடியாததை ...

வடமாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்று மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றீட்டியிருந்தார்.

இந்நிலையில் 12ஆம் திகதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது, மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் நேற்றைய தினம் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வடமாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுண்டுபோகும்.

மாகாண பொலிஸ் தலைவர்களும் உருவாகுவார்கள். எனவே வட மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More