ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 6ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
இதனால் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.