கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மினுவாங்கொடை கொத்தணி ஊடாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவலடைவதைத் தொடர்ந்து, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்கவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.0Shares