Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா நிவாரணத்திற்காக 7.3 பில்லியன் ரூபாவை ஒதுக்கிய அரசாங்கம்!

கொரோனா நிவாரணத்திற்காக 7.3 பில்லியன் ரூபாவை ஒதுக்கிய அரசாங்கம்!

2 minutes read

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மினுவாங்கொடை கொத்தணி ஊடாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவலடைவதைத் தொடர்ந்து, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்கவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.0Shares

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More