ஆர்ஜன்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூளையில் இரத்த கசிவு காரணமாக மரடோனா சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மரடோனா இன்று தனது 60ஆவது வயதில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
1986ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக, ஆர்ஜன்டினாவை கால்பந்தாட்ட விளையாட்டின் உச்சத்திற்கு மரடோனா கொண்டு சென்றார்.