இலங்கை அரசின் கடும் அடக்குமுறைகளையும் மீறி தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான செய்திகள் இற்றைப்படுத்தப்படுகின்றன.
தாயக நேரம் 6மணி 5 நிமிடத்தில் தாயகம் எங்குள் உள்ள மக்கள் வீடுகளில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமது வீடுகளை தீபங்களால் நிறைவித்ததுடன் வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றினர்.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அவர்கள் தனது இல்லத்தின் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வீடுகளில் தமது உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் சூடி உணவுப் பண்டங்கள் வைத்து, தீபங்களை ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.