லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டெலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்ற 8வது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 185ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி, Kandy Tuskers 17.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
186 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kandy Tuskers அணி 17.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை சந்திக்க யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் அணியின் துடுப்பாட்ட வீரர் Thisara Perera வின் வழி நடத்தல் அவ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.