டுபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டோரன்ட்டில் ரோயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு தட்டு அலங்கரிக்கப்பட்ட பிரியாணியின் விலை 1,000 திர்ஹா (ரூபாய் 50 ஆயிரம்) ஆகும்.
கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டு பிரியாணியை உண்ண முடியும். உணவகத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.
பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் டுபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.