இலங்கை விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது.
விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பை தொடர்ந்து கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மார்ச் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை காலி முகத்திடலில் விமானக் கண்காட்சியொன்றும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 27ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளன.
மேலும் விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப் படையின் 7 ஆயிரத்து 757 அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.