சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச், வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஜேர்மனியின் ஜோன் லெனார்ட் ஸ்ட்ரஃப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல்செட்டை 6-3 என நோவக் ஜோகோவிச்சை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிச், செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஜோகோவிச், ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட்டை எதிர்கொள்ளவுள்ளார்.