அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், காலிறுதி போட்டிகளில் டோமினிக் தீயேம், டேனில் மெட்வேடவ், விக்டோரியா அஸரென்கா ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஒஸ்திரியாவின் டோமினிக் தீயேம், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டோமினிக் தீயேம் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், சகநாட்டு வீரரான ஹென்ரி ருபெல்வ்வுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் டேனில் மெட்வேடவ் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், பெலராஸின் விக்டோரியா அஸரென்கா, பெல்ஜியத்தின் எலீஸ் மர்டன்ஸை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் விக்டோரியா அஸரென்கா, எளிதாக வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.