அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், விக்டோரியா அஸரென்கா மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், பெலராஸின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்சை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 1-6 6-, 6-3 என்ற செட் கணக்குகளில் விக்டோரியா அஸரென்கா, வெற்றிபெற்று முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், 2018ஆம் ஆண்டு சம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடியுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நவோமி ஒசாகா, 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.