ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டுபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு மகேந்திர சிங் டோனியும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இவ் இரு அணிகளுமே நடப்பு தொடரில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. புள்ளிபட்டியலில் ஹைதராபாத் அணி ஏழாவது இடத்திலும், சென்னை அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்விகளை பதிவுசெய்துள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை காயம் காரணமாக ஓய்வில் இருந்த அம்பத்தி ராயுடு, மீண்டும் அணிக்கு திரும்புவதால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றம் ஏற்படலாம். அதேபோல டுவைன் பிராவோ அணிக்குள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது.
இதுவரை இரு அணிகளும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10முறை சென்னை அணியும் மூன்று முறை ஹைதராபாத் அணியும் வெற்றிபெற்றுள்ளன.