மோட்டோ ஜிபி பந்தய தொடரின் பதின்மூன்றாவது சுற்றான வெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், யமஹா அணியின் வீரரான பிராங்கோ மோர்பிடெல்லி முதலிடம் பிடித்துள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, பந்தயம் ஆண்டுக்கு 17 சுற்றுகளாக, பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.
அந்த வகையில் ஆண்டின் பதின்மூன்றாவது சுற்றான வெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், ரிக்கார்டோ டோர்மோ சர்வதேச ஓடுதளத்தில் சர்வதேச ஒடுதளத்தில் நடைபெற்றது.
இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த பந்தயத்தில் பந்தயத் துரத்தை நோக்கி, 18 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.
இதில், யமஹா அணியின் வீரரான பிராங்கோ மோர்பிடெல்லி பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 47.652 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, டுகார்டி அணியின் வீரரான ஜெக் மில்லர் 0.093 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கே.டி.எம். அணியின் வீரரான போல் எஸ்பார்காரோ, 3.006 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மோட்டோ ஜிபி பந்தய தொடரில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சுற்றுகளின் அடிப்படையில் சுசூக்கி அணியின் வீரரான ஜோன் மிர் 171 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
யமஹா அணியின் வீரரான பிராங்கோ மோர்பிடெல்லி 142 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் சுசூக்கி அணியின் மற்றொரு வீரரான அலெக்ஸ் ரின்ஸ் 138 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் பதின்நான்காவது சுற்றான, போர்த்துகியுஸ் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 22ஆம் திகதி அல்கார்வே சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.