ஐபிஎல் போல இலங்கையில் நடக்க இருக்கிறது எல்பிஎல். இந்த கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் சர்வதேச நட்சத்திரங்கள் பலவும் கலந்துகொள்ளவுள்ளனர். ஐபிஎல்லுக்கு அடுத்தபடியாக எல்.பி.எல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்களின் கவனத்திற்கு பெரிதும் கொள்ளப்படாத எல்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர்பில் வணக்கம் லண்டன் செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் இடம்பெறும் சர்வதேச வீரர்கள் குறித்த செய்தி இதோ….
நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பபறவுள்ள லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 சுற்றுத் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சர்வதேச வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் அணியில் மொத்தமாக ஆறு சர்வதேச வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
உஷ்மான் சின்வாரி (பாகிஸ்தான்)
கைல் அபோட் (தென்னாபிரிக்கா)
டுவான் ஒலிவர் (தென்னாபிரிக்கா)
ரவி போபாரா (இங்கிலாந்து)
டோம் மூர்ஸ் (இங்கிலாந்து)
இந்த ஆறு விரளயோட்டு வீரர்களின் கடந்த கால பெறுபேறுகளையும் அவர்களது திறன்களையும் அடிப்படையாக கொண்டே யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் அணியினர், அவர்களை தமது அணியில் உள்வாங்கியுள்ளனர்.