லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடர் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.
போட்டித் தொடரின் தொடக்க விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
இந்த போட்டித்தொடரை நாளை முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொலம்போ கின்க்ஸ் கோல் க்லெட்யேடர்ஸ், ஜெப்னா ஸ்டெலியொன்ஸ், தம்புள்ளை வைகின்ஸ், கென்டி டஸ்கர்ஸ் என 05 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.
போட்டித் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியாக கொலம்போ கின்க்ஸ் மற்றும் கென்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
போட்டித் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.