Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இனம், மொழி கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் வியாஸ்காந்!

இனம், மொழி கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் வியாஸ்காந்!

4 minutes read

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் இனம் மதம், மொழி நடந்து அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

19 வயதான யாழ்ப்பாண மத்திய கல்லூரி வீரன் விஜயகாந்த் வியஸ்காந்த், நேற்று இலங்கை உள்நாட்டு டி 20 லீக்கில் விளையாடிய யாழ்ப்பாணத்தின் முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.

கடந்த சில நாட்களாக இவர் எல்பிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை முன்வைத்த நிலையில் இவர் களமிறங்கியிருப்பது பெரும் உற்சாகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

இளம் கிரிக்கெட் வீரரின் அறிமுகத்தை பாராட்டியவர்களில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கிரிக்கெட் லெஜண்ட்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்தன ஆகியோர் அடங்குவர்.

நேற்றைய போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் தோல்வியடைந்தது. என்றாலும், கொழும்பு கிங்ஸ் கப்டன் அஞ்சலோ மத்யூஸின் விக்கெட்டை தனது முதலாவது சர்வதேச விக்கெட்டாக அவர் வீழ்த்தியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இன்று அவரது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரை சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழ் பதிவாளர்கள் மாத்திரமின்றி சிங்கள நண்பர்கள், சகோதரர்களும் இவரைப் பாராட்டி வருகின்றனர். அதன் பதிவுகள் இதோ.

No description available.No description available.No description available.
No description available.

எல்பிஎல் போட்டியிலும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்கும் இணைய ஊடக அனுசரவை வழங்கி வரும் வணக்கம் லண்டன் இணையத்தளமும் வியஸ்காந்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More