இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜே ஷா சனிக்கிழமை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான ஷா, இந்த பதவியை பொறுப்பேற்ற இளம் வயதுடையவர் ஆவார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவர் நஸ்முல் உசேன் இதற்கு முன்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜே ஷா,
இந்த மரியாதையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னை பரிந்துரைத்ததற்கும், இந்த மதிப்புமிக்க பதவிக்கு என்னை தகுதியானவர் என்று கருதியதற்கும் பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது மதிப்பிற்குரிய சகாக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.