முதலிடத்தில் உள்ள ஜப்பானின் சுமோ மல்யுத்த வீரர் ஹகுஹோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பான் சுமோ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மங்கோலியாவில் பிறந்த 35 வயதான சுமோ கிராண்ட் சாம்பியனான ஹகுஹோ தனது வாசனை உணர்வை இழந்த பின்னர் கொவிட் -19 பரிசோதனையை நேற்யை தினம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் கிராண்ட் சுமோ போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஹகுஹோ வுக்கு கை நழுவிப் போயுள்ளது.
ஜப்பானில் தற்போது 249,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,472 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
அதனால் டொக்கியோவிற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வியாழக்கிழமை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இந்த கோடையில் தாமதமான 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கை நடத்த முடியுமா என்பதில் புதிய சந்தேகம் எழுந்துள்ளது.