அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்துமாறு உலக நம்பர் வன் சம்பியன் அதிகாரிகளை வலியுறுத்தியதையடுத்து, நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸால் விமர்சிக்கப்பட்டார்.
எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பமாகும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபனுக்காக கடந்த வாரம் 1,200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது வீரர்கள் சென்ற மூன்று விமானங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 72 வீரர்கள் 14 நாட்கள் தங்கள் ஹோட்டல் அறையில் முழு நேரம் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களும், அவுஸ்திரேலிய அதிகாரிகளும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந் நிலையில் தனிமைப்படுத்தலில் இருக்கும் சில வீரர்களின் விரக்தியை எடுத்துக் காட்டிய செர்பிய வீரர் ஜோகோவிச், வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அவரது பரிந்துரைகள் விக்டோரியா மாநில அதிகாரிகளால் மறுக்கப்பட்டதுடன், மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் பொதுமக்களைப் பாதுகாக்க கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார்
இது இவ்வாறிருக்க ஜோகோவிச்சின் கோரிக்கையை எடுத்துக் காட்டி பேசிய உலக டெஸ்ட் தரவரிசையில் 47 ஆவது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியோஸ் “ஜோகோவிச் ஒரு கருவி” என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு செர்பியர்கள் ஒரு கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்த பின்னர், ஜோகோவிச்சும் ஏனையவர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
நீங்கள் (ஜோகோவிச்) எல்லா நெறிமுறைகளையும் புறக்கணிக்கும்போது அதுதான் நடக்கும். இது ஒரு நகைச்சுவையான விடயம் அல்ல என்றும் கூறியுள்ளார்.