Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

2 minutes read

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரர்  சச்சித்ர சேனநாயக்க மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில்,  அவர் தாக்கல் செய்த முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் குறித்த முன் பிணை கோரும் மனு ஆராயப்பட்ட நிலையிலேயே நீதிவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சசித்ரவிடம்  விசாரித்து வாக்கு மூலம் பெற  3  தடவைகள் அழைக்கப்பட்டும் அவர்  விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதாக  பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

அதன்படி கடந்த பெப்ர்வரி 24 ஆம் திகதி  தினம் சச்சித்ர சேனாநாயக்க, மூன்றாவது தடவையாக குறித்த பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

சச்சித்ர சேனாநாயக்கவின் இணக்கப்பாட்டுடனேயே, இன்றைய தினம் வருமாறு அவருக்கு திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அன்றும்  விசாரணைக்கு வருகை தர முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.

எல்.பி.எல். தொடரின் போது கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங் ஆகிய அணிகளின் வீரர்கள் இருவரை, ஆட்ட நிர்ணயத்துக்கு சச்சித்ர சேனாநாயக்க   அழைத்ததாக, குறித்த வீரர்கள் சர்வதேச கிரிக்கட் சபைக்கு சான்றுகளுடன் முறையிட்டுள்ளனர்.

 இந் நிலையிலேயே அம்முறைப்பாடுகள் விளையாட்டு குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு, சர்வதேச கிரிக்கட் சபையினால் அனுப்பட்டுள்ளன.

இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவு பெற்று,  சட்ட மா அதிபரின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது, சசித்ர சேனாநாயக்கவின் வாக்கு மூலத்தை பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படியே முதலில் கடந்த பெப்ரவரி  15 ஆம் திகதியும், அதன் பின்னர் 17 ஆம் திகதியும் சச்சித்ர சேனநாயக்க  வாக்கு மூலம் பெற அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் அந்த திகதிகளில் ஆஜராக முடியாது எனவும் வேறு தினம் ஒன்றினையும் கோரியிருந்த நிலையில், கடந்த பெப்ரவரி  17 ஆம் திகதி, சச்சித்ரவின் இணக்கப்பாட்டுடன்  24 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்றும் அவர் ஆஜராகாத நிலையில், இது குறித்து எடுக்க முடியுமான அடுத்த கட்டம் தொடர்பில் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியிலேயே சச்சித்ர சேனநாயக்க சார்பில் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More