Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் | பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் | பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

1 minutes read

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தை பிடித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More