Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சீனக் குடியேற்றமா?

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சீனக் குடியேற்றமா?

3 minutes read

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் அண்மைக்காலத்தில் சீனக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டடு வரும் சிறுவர் பூங்கா தொடர்பாகவும் கட்டிடங்களில் எழுதப்பட்டு இருக்கும் சீன மொழி எழுத்து தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்கள் உலாவிக் கொண்டு இருப்பதனை அவதானிக்க முடிந்தது.

குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நேற்றைய தினம் குறித்த சிறுவர் பூங்காவுக்கு சென்றிருந்தோம் அங்கு சென்று சீனக் கட்டிடக்கலை பாணியில் அமையப்பெற்றிருக்கும் கட்டிடங்கள் மற்றும் சீன தொழில்நுட்ப முறைகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர்கள் விளையாடும் சாதனங்களை புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தோம்.

அப்பொழுது குறித்த இடத்திற்கு வருகை தந்த ஓர் பெண் இவற்றினை எதற்காக புகைப்படம் எடுக்கிறீர்கள் என வினவினார். அப்பொழுது அப்பெண்ணிற்கு தமிழர்கள் பரந்து வாழும் இந்த இடத்தில் தமிழர்களுக்கு விளங்காத சீன மொழி கட்டடத்தில் எழுதியிருப்பது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஆகையால் இதனைப் பற்றி ஆராய்வதற்கு இந்த எழுத்துக்களை புகைப்படம் எடுத்தோம் என கூறினேன்.

அப்பொழுது அந்த பெண் குறித்த காணி மற்றும் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதையும் நான் தான் மேற்பார்வை செய்கின்றேன் என குறிப்பிட்டார்.

இந்தக் கட்டடம் எனது சித்தப்பாவின் நிதியில் தான் கட்டப்படுகின்றது எனது சித்தப்பா புலம்பெயர் நாட்டில் உள்ளார் அவர் இந்த கிராமத்துக்கு அழகிய சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு எண்ணினார் .

ஆகையால் அந்தப் பூங்கா வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் சிறுவர் பூங்காவின் மாதிரி படங்களை சமூக வலைத் தளங்களில் தேடிய போது இவ்வாறு ஓர் படம் இருந்தது இது வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. இவ்வாறான மாதிரி பூங்காவினை எமது கிராமத்தில் அமைக்க எண்ணி வேலைப்பாடுகள் இடம்பெற்று வருகின்றது என குறிப்பிட்டதுடன்.

அப்பொழுது இவ்வாறான கட்டிடத்தின் முற் பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்கள் குறிக்கப் பட்டிருப்பது தொடர்பாக கேட்டபோது குறித்த பெண்மணி இவ்கட்டிடத்தில் எழுதப்பட்டிருப்பது சீன மொழி என எமக்குத் தெரியாது.

நாம் சமூக வலைத்தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவ்வாறு வரையப்பட்டிருந்தது நாம் இது மொழி என்று நினைக்கவில்லை இதனை ஓர் “#டிசைன்” என்றே நினைத்து வரைந்தோம் என குறிப்பிட்டார்.

அப்பொழுது குறித்த பெண்ணிடம் இப்பொழுது இது சீன மொழி என்று உங்களுக்கு தெரிகின்றது தானே இவ்வாறான விடயம் மக்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது இதனை அழித்து தமிழ் மொழியில் சிறுவர் பூங்கா என எழுதினால் நல்லம் என்று குறிப்பிட்டபோது குறித்த பெண் இதனை நான் முடிவு செய்ய இயலாது என குறிப்பிட்டு விட்டு சென்றார்.

-பாரராஜசிங்கம் சுஜீவன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More