ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் மாத பிற்பாதிக்கு பிறகு, குறைந்த அளவிலான கொவிட்-19 உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 892பேர் பாதிப்படைந்ததோடு, 55பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு (47பேர்) பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், தற்போது குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 27ஆயிரத்து 745பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 740ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 904பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து 36ஆயிரத்து 101பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.