Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் டிக்டோக்கின் தலைமை நிர்வாகி கெவின் மேயர் பதவி விலகல்!

டிக்டோக்கின் தலைமை நிர்வாகி கெவின் மேயர் பதவி விலகல்!

1 minutes read

சீனாவிற்கு சொந்தமான காணொளி பயன்பாடான டிக்டோக்கின் தலைமை நிர்வாகி கெவின் மேயர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் குற்றம் சாட்டப்பட்டதன் பின்னணியில், தலைமை நிர்வாகி ஆன சில மாதங்களிலேயே கெவின் மேயர் டிக்டோக்கிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவரது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘சமீபத்திய வாரங்களில், அரசியல் சூழல் கூர்மையாக மாறியுள்ளதால், பெருநிறுவன கட்டமைப்பு மாற்றங்கள் என்ன தேவைப்படும் என்பதையும், நான் கையெழுத்திட்ட உலகளாவிய பங்கிற்கு என்ன அர்த்தம் என்பதையும் நான் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பைச் செய்துள்ளேன்.

இந்த பின்னணியில், மிக விரைவில் ஒரு தீர்மானத்தை எட்டுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஒரு கனமான இதயத்தோடு தான் நான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்’ என எழுதியுள்ளார்.

மேலும், தற்போது டிக்டோக்கின் பொது மேலாளராக இருக்கும் வனேசா பப்பாஸ் இடைக்காலத் தலைவராக வருவார் என்று நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இணைய நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டோக்கை, செப்டம்பர் நடுப்பகுதியில் அதன் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க வெள்ளை மாளிகை உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More