Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பெய்ரூட்டில் மீண்டும் வெடிப்பு சம்பவம்!

பெய்ரூட்டில் மீண்டும் வெடிப்பு சம்பவம்!

1 minutes read

பெய்ரூட் துறைமுகத்தில் இன்று வியாழக்கிழமை ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 190 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 6,500 பேர் காயமடைந்தனர் மற்றும் லெபனான் தலைநகரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சேதங்களுக்குள்ளாகியது.

இந் நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் அப் பகுதியில் மீண்டும் பரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளமையினால் குடியிருப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்து என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பெரும் கருப்பு புகை மண்டலங்கள் வானை எட்டியுள்ளன.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4 அன்று வெடித்ததில் சுமார் 191 பேர் கொல்லப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More