மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 70ஆயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மெக்ஸிகோவில் வைரஸ் தொற்றினால் 70ஆயிரத்து 183பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட மெக்ஸிகோவில் இதுவரை ஆறு இலட்சத்து 58ஆயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 935பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 534பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 352பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 892பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை நான்கு இலட்சத்து 63ஆயிரத்து 764பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.