பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 481பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24மணித்தியாலத்தில் மட்டும் 526பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிப்பை சந்தித்த 17ஆவது நாடாக விளங்கும் பாகிஸ்தானில், இதுவரை ஆறாயிரத்து 379பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை ஐந்தாயிரத்து 673பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 534பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் மேலும் இரண்டு இலட்சத்து 89ஆயிரத்து 429பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.