Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில்

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில்

2 minutes read
4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில்

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன. தேர்தலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், ஜனநாக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்கள் தடுப்பூசி இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவில் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் அமெரிக்கர்கள் பங்கேற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

அமெரிக்க வரலாற்றில் மிக விரைவான பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் அனுகுமுறை அறிவியலுக்கு ஆதரவான ஒன்று. ஆனால் ஜோ பைடனின் அணுகுமுறை அறிவியலுக்கு எதிரான ஒன்று.

பைடனின் அணுகுமுறை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, இருந்தாலும் நாங்கள் ஏற்கனவே செய்தவற்றிலிருந்து நிறைய நகலெடுக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளுடனான பயணத் தடையை ஜோ பைடன் எதிர்த்தார். அவர்களிடம் முடிவடையாத ஊரடங்கு நடைமுறை யூக்திகள் தான் உள்ளது. நாம் ஒன்றும் முழு ஊரடங்கை அமல்படுத்தவில்லை.

நாம் உண்மையில் இதற்கு முன் அனுபவித்திடாத அளவிலான மிகப்பெரிய பொருளாதார விகிதத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். எனது திட்டம் கொரோனா வைரசை அழிப்பது… ஆனால் ஜோ பைடனின் திட்டமோ அமெரிக்காவை அழிப்பது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More