குவைத்தின் புதிய மன்னராக 83 வயதுடைய ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் அல்-சபா பதவியேற்றுள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா தனது 91 வயதில் அமெரிக்காவில் நேற்று உயிரிழந்துள்ள நிலையிலேயே ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் இன்று(புதன்கிழமை) பதவியேற்றுள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஷேக் நவாஃப் சட்ட மன்றத்தில் உரையாற்றும்போது 14 ஆண்டுகளாக குவைத்தை ஆட்சி செய்த புகழ்பெற்ற இராஜதந்திரியான ஷேக் சபா உயிரிழந்ததை எண்ணி உணர்ச்சி வசப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மன்னர் ஷேக் சபா உயிரிழந்துள்ள நிலையில் குவைத்தில் 40 நாள் தேசிய துக்க தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் புதிய மன்னராக பெயரிடப்பட்டார் Sheikh Nawaf al-Ahmed!
குவைத்தின் புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார்.
குவைத் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக, குவைத் வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட அவர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் குவைத் மன்னராகப் பதவி வகித்தார்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, Sheikh Sabah al-Ahmed al-Sabah, நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து, குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed ஐ பெயரிட, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.