ஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்ததாக நம்பப்படும் ரொக்கட் தாக்குதல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், கேர்னல் வெய்ன் மரோட்டோ தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் அரை தன்னாட்சி பகுதியான குர்திஸ்தான் பிராந்தியத்தில் எர்பில் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க துருப்புக்களை குறிவைப்பதாக நம்பப்படும் பல ரொக்கெட்டுகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக குர்திஷ் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரொக்கெட்டுகளுக்கான அரிய இலக்கான எர்பில் தாக்குதல், ஈராக் அதிகாரிகளால் தீவிரமானதாக கருதப்படுகிறது.
ஈராக்கின் பிரதமர் தனது நாட்டில் வெளிநாட்டுப் பணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
நினிவே மாகாணத்தில் உள்ள ஷேக் அமீர் கிராமத்தின் எல்லையிலிருந்து ஆறு ரொக்கெட்டுகள் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டணிப் படைகளை குறிவைத்து பி.எம்.எஃப். வீசியதாக ஈராக் குர்திஸ்தானின் பயங்கரவாத தடுப்பு சேவை தெரிவித்துள்ளது.
பி.எம்.எஃப். என்பது ஈராக்கின் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் ஈரான் ஆதரவு ஈராக் ஷியைட் போராளிகளைக் கொண்ட ஒரு குழு ஆகும்.
ஈராக் குர்திஸ்தானின் பயங்கரவாத தடுப்பு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘ஏவுகணைகள் தடுத்து நிறுத்தப்பட்டன, மேலும் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஈரானில் தடைசெய்யப்பட்ட ஈரானிய-குர்திஷ் எதிர்க்கட்சியின் தலைமையகத்தை ஈராக்கெட்டுகளில் ஒன்று தாக்கியதாக கூறப்படுகிறது