ஒன்றில் போர் நிகழ்கிறது. இல்லையேல் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதுதான் இந்நாட்டின் நிகழ்கால அவலம். ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.40 மணி அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷைத் என்ற பகுதியில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.