Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!

ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!

2 minutes read

வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்புக் கோட்பாடு அதன் மக்கள் மற்றும் பூர்வீக திறன்களை வலுவாக நம்பியிருப்பதை அடிப்படையாகக் கொண்டது.

வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள், பேரழிவு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான ஆயுதங்களை வாங்குதல் ஆகியவை ஈரானின் பாதுகாப்புக் கோட்பாட்டில் இல்லை என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரான், ரஷ்யா, சீனா, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை 2007 ஆம் ஆண்டு ஆயுதத் தடையை விதித்தது.

எவ்வாறாயினும் 2018 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்து வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன.

ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளின் அலைகளை விதித்து அமெரிக்கா மே 2018 இல் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தலிருந்து விலகியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்தை அவிழ்க்கவும் ஈரான் மீதான ஆயுதத் தடையை நீக்குவதைத் தடுக்கவும் தனது அதிகாரத்தை அனைத்து வழிகளிலும் பயன்படுத்தியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக ஒக்டோபர் மாத தொடக்கத்தில் 18 ஈரானிய வங்கிகள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன, அவற்றில் மனிதாபிமான வர்த்தக பரிவர்த்தனைகளை செயலாக்குவது உட்பட ஈரானின் நிதித் துறையை உலகப் பொருளாதாரத்திலிருந்து திறம்படப் பிரிக்கிறது.

ஈரானின் பிராந்திய செல்வாக்கை விரிவாக்குவதை எதிர்க்கும் இஸ்ரேல் மற்றும் பல அரபு நாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்க நிர்வாகம் தீவிரமாக ஆதரவு காட்டி வருகிறது.

14 யு.என்.எஸ்.சி உறுப்பு நாடுகளில் இருந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா E3 என அழைக்கப்படும் நாடுகள் மற்றும் 8 பேர் வாக்களித்தனர், ரஷ்யாவும் சீனாவும் இந்த நீட்டிப்பை எதிர்த்த அதேவேளை டொமினிகன் குடியரசு மட்டுமே தீர்மானத்தை ஆதரித்தது.

ஈரானின் ஆயுதத் தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க ஓகஸ்ட் மாதம் ஐ.நா. பாதுாகப்பு சபையில் தாக்கல் செய்தது. எனினும் அது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வழக்கமான ஆயுத ஏற்றுமதி மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடைகள் இன்னும் நடைமுறையில் உள்ளது, அவை 2023 வரை நடைமுறையில் இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More