பிரித்தானியாவில் நேற்று புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றினால் 1,041 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இது ஏப்ரல் மாதத்திலிருந்து நாட்டில் காணப்பட்ட நாளாந்த கொரோனா உயிரிழப்புகளில் மிக உயர்ந்த தொகையாகும்.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,346 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, 2,845,265 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்திலிருந்து 1,072 கொரோனா உயிரிழப்புகளால் ஏப்ரல் 8 ஆம் திகதி மிக மோசமான நாளாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்த நேற்று முதல் 06 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், கொரோனா தடுப்பூசி திட்டம் நாட்டின் இயல்பு நிலைக்கு திரும்பும் பாதை என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்திலிருந்து 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.