Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆங் சான் சூகி மீது மியன்மார் பொலிஸார் குற்றச்சாட்டுகள் பதிவு

ஆங் சான் சூகி மீது மியன்மார் பொலிஸார் குற்றச்சாட்டுகள் பதிவு

2 minutes read

மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி சட்டவிரோதமாக தகவல்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக அந்நாட்டு பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் நெய்பிடாவில் உள்ள 75 வயதான ஆங் சான் சூகியின் வீட்டில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் ஆறு வோக்கி- டோக்கி ரேடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரேடியோக்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக நீதிமன்றத்தில் பொலிஸ் பதிவுசெய்துள்ளது. 

சாட்சிகளைக் கேள்வி கேட்பதற்கும், சாட்சியங்களைக் கோருவதற்கும், பிரதிவாதியைக் கேள்வி எழுப்பிய பின்னர் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் புதன்கிழமை மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆவணம் சூகியின் தடுப்புக்காவலைக் கோரியது.

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி வின் மைன்ட் மீது கடந்த நவம்பரில் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை மீறியதற்காக பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை என ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) மனித உரிமைகளுக்கான ஆசியான் பாராளுமன்ற  உறுப்பினர்களின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்துள்ளார்.

“இது அவர்களின் சட்டவிரோத அதிகாரப் பறிப்பை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கும் இராணுவ ஆட்சிக்குழுவின் அபத்தமான நடவடிக்கை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More