Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

1 minutes read

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இரண்டு ஆண்டுகள் நன்னடத்தையுடன்(Good Behaviour Bond மூலம) இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  

அதே சமயம், இந்த மாணவரின் அனுமதி விசா தற்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இவர் நாடுகடத்தலாம் என்றும் கூறப்படுகின்றது. 

முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இம்மாணவர் இணையம் வழியாக சீனாவிலிருந்து ஒரு பொம்மையை  இறக்குமதி செய்திருந்த நிலையில், அப்பொம்மையை மாணவரின் முகவரிக்கு சென்றடைவதற்கு முன்பு பெர்த் விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் கண்டுப்பிடித்திருக்கின்றனர். 

இந்நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அம்மாணவர் தங்கியிருந்த இடத்தை சோதனையிட்ட காவல்துறை அதிகாரிகள் 2 அலைப்பேசிகள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்வை ஆய்வு செய்ததில் அவற்றில் குழந்தைககள் தொடர்பான தகாத விஷயங்கள் சேமிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து இவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை பாலியல் தொடர்பான பொம்மையை இறக்குமதி செய்வதற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மற்றும்/அல்லது சுமார் 5 லட்சம் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்க ஆஸ்திரேலிய சட்டத்தில் வழி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More