பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசல் சுல்தான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மிதமான கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.