Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மியான்மில் இ ராணுவ ஆட்சி | வான்வழித் தாக்குதல் | வெளியேறும் மக்கள்

மியான்மில் இ ராணுவ ஆட்சி | வான்வழித் தாக்குதல் | வெளியேறும் மக்கள்

1 minutes read

மியான்மரில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஆயுத இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

இதன் காரணமாக,  மியான்மரின் Karen மாநிலத்திலிருந்து சுமார் 3,000 மக்கள் அண்டை நாடான தாய்லாந்தில் தஞ்சமடைந்திருப்பதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Karen பெண்கள் அமைப்பின் அறிக்கைப்படி, அம்மாநிலத்தின் Mutraw மாவட்டத்தில் 5 இடங்களில் இத்தாக்குதல் நடந்திருக்கிறது. இத்தாக்குதல் இடம்பெயர்ந்த முகாமின் மீதும் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில், காட்டில் மறைந்திருந்து பின்னர் தாய்லாந்தில் சுமார் 3000 மியான்மரிகள் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 

மியான்மரின் மிகப்பெரிய ஆயுத இயக்கமாக கருதப்படும் Karen தேசிய ஒன்றியத்தின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய முதல் வான்வழித் தாக்குதல் இது என ஜகார்த்தபோஸ்ட் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

மியான்மரின் மூன்றில் ஒரு பகுதியை, குறிப்பாக அந்நாட்டின் எல்லைப் புறங்களை பல கிளிர்ச்சி குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. 

மியான்மருக்கும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கும் பல ஆண்டுகளாக நீடித்து வரும் முரண்பாட்டின் காரணமாக தாய்லாந்தில் ஏற்கனவே 90,000 பேர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

ஏற்கனவே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால், பலர் உயிருக்கு வெளியேறி வரும் நிலையில் தற்போது இன ரீதியான பிரச்னைகளை தூண்டும் செயலில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் மியான்மரின் சூழல் மேலும் மேலும் மோசமடையக்கூடும் எனக் கருதப்படுகின்றது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More