December 4, 2023 5:38 am

திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது.

கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொரி மீது மோதியது.

இந்த விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் லொறி சாரதியை கைது செய்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்