நாடுமுழுவதும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக களுத்துறை, நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது என்றும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் இரத்தினபுரி, கிரியெல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவலை ஆகிய பகுதிகளுக்கும் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இருப்பினும் வாக்கெண்ணும் பணிகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.