மூணாறு நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இரண்டு வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 55 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு வயது குழந்தையின் சடலம் மீட்டக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரையில் 12 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், காணாமல் போயுள்ள 14 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.